Thursday, September 4, 2008

மார்டன் கேர்ள்

அழகு காட்டும் போட்டிக்கு

அளவு காட்ட செல்பவள் போல்

அரைகுறை ஆடையில் நீ இருந்த போது

உன்

தொடையழகை ரசித்தவர்களின்

தொகையறாகளை முழுவதுமாக

தொகுத்தளிக்க முடியவில்லை

இருந்தாலும் ஒன்றிரண்டு

சொல்கிறேன் கேள் . . .

காலாடை அணியாமல்

அரையாடை அணிந்த நீ

அழகு பெண்ணல்லவா

திருந்தாத உடம்பின் மேல்

பொருந்தாத உடை

பொழுது போனதும்

கதற போகின்றது

நீ பிறந்த வீட்டின்

பிடியளவு நுழைவாயில் மூடும்

கலரான ஆடை கன்கொள்ளா காட்சியாம்

No comments: