Sunday, September 7, 2008

கடன்பட்டார் நெஞ்சம்போல

காலையில் கண் விழித்து எழுந்ததும்
மனைவி கேட்டாள்
மளிகை வாங்க காசு வேனும்
மகன் கேட்டான்
அப்பா பள்ளி கட்டணம் என்றான்
கடைக்கு சென்றால்
வாடகை கேட்டு ஒருவர்
சம்பளம் கேட்டு கடை பையன்
இதற்காக கடன் வாங்கி
தொழில் நடத்த கடன் வாங்கி
மொய் வைக்க கடன் வாங்கி
கடன் வாங்கி கடன் வாங்கி
கலைத்துபோய்
கடன் பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் குடும்பதலைவன்